சென்னை: பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 வகுப்பில், செப்., மற்றும் அக்டோபரில், துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள், இன்று பிற்பகலில், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, நாளை காலை, 11:00 மணி முதல், நவ., 2 மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *