வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

கிண்டி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *