தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்: தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத் தலைவரின் கோரிக்கையை பரிசீலித்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று தினங்கள் கூடுதல் சிறப்புக் காட்சிகள் இடம்பெற அனுமதி அளிக்கப்படுகிறது. அதுபோல, டூரிங் டாக்கீஸ்களில் தீபாவளி நாளான நவம்பர் 6, 10, 11 ஆகிய மூன்று தினங்களில் காலை 11.30 மணி காட்சியையும், நவம்பர் 7, 8, 9 ஆகிய மூன்று தினங்களில் பிற்பகல் 2.30 மணி காட்சியையும் கூடுதல் சிறப்புக் காட்சியாக திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த சிறப்புக் காட்சிகளை வெளியிடும் திரையரங்குகள், முன்கூட்டியே அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட உரிம அதிகாரிகள் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *