மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

மத்திய சென்னை வருவாய்க் கோட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் திருமங்கலத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும். காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *