அரசியல், சமூகம், இலக்கியம் எனப் பல தலைப்புகளில் களம் காண்பது புதிய தலைமுறையின் “வட்டமேசை விவாதம்”. தமிழகம் எங்கும் துறை சார் நிபுணர்களைப் பங்கேற்பாளர்களாகக் கொண்டு ஏராளமான பார்வையாளர்கள் முன் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சி. மாதம் ஒரு தலைப்பும் ஊரும் என மக்கள் ஆதரவுடன் மக்களுக்காகச் சிறப்பாகப் பயணிக்கிறது புதிய தலைமுறையின் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி மாதம் ஒரு முறை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

அண்மையில் சென்னை புத்தகக் காட்சியில் மொழியையும் பண்பாட்டையும் காப்பவை பழந்தமிழ் இலக்கியஙகளா? புத்தமிழ் இலக்கியங்களா? என்ற தலைப்பில் அரங்கு நிறைந்த நிகழ்ச்சியாக சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *