சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் தெரிவிக்கும் வழக்கத்தை உடைய பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஓகே கண்மணி குறித்தும், அதில் நடித்துள்ள நடிகர் துல்கார் சல்மான் குறித்தும் கூறியுள்ள சர்ச்சைக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரிலீசான ‘ஓகே கண்மணி’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஓகே பங்காரம்’ படத்தை பார்த்த ராம்கோபால் வர்மா அந்த படம் குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘மம்முட்டிக்கு இதுவரை கொடுத்த விருதுகள் அனைத்தையும் அவார்டு கமிட்டியில் உள்ளவர்கள் திரும்ப பெற்று, அந்த விருதுகள் அனைத்தையும் அவருடைய மகன் துல்கார் சல்மானுக்கு கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் துல்கார் சல்மானின் நடிப்பை ஒப்பிடும்போது மம்முட்டியின் நடிப்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிப்பு போல உள்ளது என்றும், நல்ல நடிப்பு என்றால் என்ன என்பதை மம்முட்டி அவருடைய மகனிடம் இருந்து பாடம் கற்று கொள்ளலாம்’ என்றும் தெரிவித்துள்ளார். ராம் ம்கோபால் வர்மாவின் இந்த சர்ச்சைக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Ram Gopal Varma tweets Mammootty Should Learn Acting from his Son.