கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தால் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு ஒன்றை நேற்று தென்னக ரயில்வே செய்துள்ளது.

இதன்படி ரயில் எண் 06017 என்ற ரயில் மே 2 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும் என்றும் அதேபோல் மறுமார்க்கத்தில் ரயில் எண் 06018 என்ற ரயில் மே 3-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறையில் பயணம் செல்லும் ரயில் பயணிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary : Southern Railway announces special train because of summer holidays.