இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிலம் வாங்குவது சுலபமான விஷயமாகி வருகிறது. இடம் பார்த்தல், ப்ரோக்கர் மீது நம்பிக்கை வைத்தல் போன்ற பழைய முறைகள் மாறி, மொபைல் ஆப்புகள் மூலம் நேரடியாக நிலம் சம்பந்தமான தகவல்களை சரிபார்க்கும் வசதிகள் உள்ளன.
பலரும் இடம் வாங்கும் போது ஏமாற்றப்படுகிறார்கள். ப்ரோக்கர்கள் தவறான தகவல்களை கொடுத்து மிச்சிக்கிறார்கள். ஆனால் இப்போது ஒரே ஒரு மொபைல் ஆப் கொண்டு இதனைத் தடுக்கும் வழி உள்ளது.
நிலம் வாங்கும் முறையை மாற்றும் மொபைல் செயலிகள்!
- நில உரிமை சரிபார்ப்பு:
அரசு ஆதரவு பெற்ற செயலிகள் மூலம் பட்டா, சிட்டா, எஃப்எம்பி (FMB) போன்ற முக்கியமான பதிவுகளை நேரடியாக காணலாம். - ஈன்கம்ப்ரன்ஸ் சான்றிதழ் ( (Encumbrance Certificate) சரிபார்ப்பு:
இந்த சான்றிதழ் மூலம் அந்த நிலம் மீது எந்தவொரு சட்டபூர்வமான கட்டுப்பாடும் இல்லையா என்பதை உறுதி செய்யலாம். - ஜிபிஎஸ் (GPS) அடிப்படையிலான நில எல்லை வரைபடம்:
சிறந்த செயலிகள் மூலம் நிலத்தின் துல்லியமான எல்லைகளை செயற்கைக்கோள் படம் மூலம் காணலாம். - டிஜிட்டல் ஆவணங்கள்:
பேப்பர் ஆவணங்களை நம்ப வேண்டியதில்லை. அனைத்து தகவல்களும் சட்டபூர்வமாக மொபைலில் கிடைக்கின்றன.
ஏன் இது முக்கியம்?
அறிந்த இடங்களிலும் அறியாத இடங்களிலும் நிலம் வாங்கும் போது, பலரும் ப்ரோக்கர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். போலி ஆவணங்கள், சொத்துகள் மீதான வழக்குகள் போன்றவற்றால் பெரிய நஷ்டங்களை சந்திக்கிறார்கள். ஆனால் TNREGINET, DigiLocker, மற்றும் பிற மாநில அரசுகளின் நில தகவல் செயலிகள் மூலம் இப்போது பாதுகாப்பாக நிலம் வாங்க முடிகிறது.
