குறைகள்,பிரச்சனைகளை தைரியமாக பேச ஓர் புதிய நிகழ்ச்சி

கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற பிப்ரவரி 26-ந் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு “வாழ்ந்து காட்டுவோம்” என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

மக்களின் குறைகள், பிரச்சனைகளை தைரியமாக பேசும் ஓர் புதிய அரங்கத்தில் நடிகை குயிலியுடன், நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைகளோடு புத்தம் புதிய வடிவில் இந்த நிகழ்ச்சி உருவாகியிருக்கிறது.

குடும்ப பிரச்சனை முதல் சமூக பிரச்சனை வரை செய்திகளில் நாம் பார்த்து கடந்து சென்ற, மனதை உருக்கும் பல்வேறு பிரச்சனைகளை களையும் ஓர் களமாக “வாழ்ந்து காட்டுவோம்” உருவாகி இருக்கிறது. மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளை செவிகொடுத்து கேட்கும் இந்த நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 :00 மணிக்கு காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *