எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தமிழ்ப் பேராயத் தலைவரும்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளருமான என்.சேதுராமன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் 4ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும்.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த சான்றிதழ் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்த படிப்புக்கு வயது வரம்பு இல்லை. இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதியும் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த வகுப்புகளில் சேருவது குறித்து கூடுதல் விவரங்களை அறிய இல.சுந்தரம், கணினித் தமிழ் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர்,தமிழ்ப்பேராயம்,எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகம்,காட்டாங்கொளத்தூர், சென்னை-603203 என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 044-27417375, 9790900230 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.

English Summary: Admission opens for Computer Tamil Certification Course in SRM University, said by Tamil Department Head Mr.Sethuraman.