கேரள வெள்ள நிவாரணத்துக்கு, தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வரலாறு காணாத வெள்ளத்தால் தத்த ளித்து வரும் கேரள மாநிலத் துக்கு, தமிழக மக்கள் தங்க ளால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும். தமிழக அரசு சார்பில் 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 10 ஆயிரம் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும், தனித்தனியே நிவா ரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக எம்பிக் கள், எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம், கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *