ajith-27102015‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்து முடித்துள்ள ‘வேதாளம்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ளது 100% உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த நேரத்தில் ரிலீசாக வேண்டும் என்பதற்காக அஜீத் உள்பட ‘வேதாளம்’ படக்குழுவினர் இரவுபகலாக தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். அஜீத்தும் அதிகாலை 4 மணி வரை டப்பிங் பணிகளை மேற்கொண்டு தனது பங்கிற்கு இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஜெமினி ஸ்டுடியோவில் உள்ள லேமில் இயக்குனர் சிவா உள்பட இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் ஆகியோர்களை அஜித் திடீரென நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் சிவா தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இரவு பகலாக ‘வேதாளம்’ படத்திற்காக தீவிரமாக பணி செய்து வரும் எங்களது டெக்னிக்கல் டீமை அஜீத் நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தியது எங்களுக்கு பெரிய எனர்ஜியாக இருந்தது. எங்கள் டீமை உற்சாகப்படுத்திய, தல’அஜீத்துக்கு எங்கள் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். டெக்னிக்கல் டீம் உடன் அஜீத் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரியும் இரண்டு வயதான செக்யூரிட்டிகள் அஜீத்தை பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவிததாகவும், அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய, அவர்களை வரச்சொன்ன அஜீத் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு, அவர்களையும் பற்றியும், அவர்களுடைய குடும்பத்தினர்களை பற்றியும் மிக அக்கறையுடன் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அஜீத் ஒரு நடிகரையும் தாண்டி அனைவராலும் மதிக்கப்படுவது அவரது மனிதநேயம்தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ‘வேதாளம்’ படக்குழுவினர் தெரிவித்தனர்.
English summary-Ajith visited the post-production spot and interacted with the crew members.