metro-train1சென்னை நகரின் முக்கிய அடையாளமான மெட்ரோ ரயில் தற்போது கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலந்தூரில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் போக்குவரத்துக்கு தயாராக உள்ளது.

நேற்று காலை ஆலந்தூர்– விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் 4 பெட்டிகளுடன் குறைந்த வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது.

ஆலந்தூர் சிமெண்ட் ரோடு – மீனம்பாக்கம் போலீஸ் நிலையம் இடையே அமைக்கப்பட்ட சுமார் 2 கிமீட்டர் தூர சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சென்றது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிமுடிந்து மெட்ரோ ரெயில் செல்ல தயாராக உள்ளது. சோதனை ஓட்டம் திருப்தியாக உள்ளது. விரைவில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என்று கூறினர்.

English summary : Alandur – Airport Metro trial run