அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை அலங்கா நல்லூர்ஜல்லிக்கட்டு போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில்மருத்துவ குழுக்கள் காளைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். காளைகள் 120 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும் எனவும், 3 முதல் 15 வயது வரைக்குட்பட்ட மாடுகளாகஇருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *