ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ‘அருள் நேரம்’ என்ற பக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரசித்திபெற்ற தொன்மையான ஆலயங்களின் ஆன்மீக சிறப்புகளையும், அவற்றின் தல வரலாற்றையும் காட்சிப்படுத்தி தொகுத்து வழங்குகின்றனர். அதோடு, ‘தினம் ஒரு அபிஷேகம்’ என்ற பகுதியில் செவிகளுக்கினிய பக்திப் பாடல்களை, இறைவனின் அபிஷேக – ஆராதனை திருக்காட்சிகளுடன் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்புகின்றனர்.

மேலும், ஆன்மீக சந்தேகங்களை தெளிவுபடுத்தும் ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்’ பகுதியை திரு.மகேஷ் ஐயரும், புலர்காலை பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்கும் ‘ஆனந்த ஆரம்பம்’ பகுதியை திரு.மணிகண்டனும், சித்தர்களின் வரலாற்றை பதிவு செய்யும் ‘குருவே சரணம்’ பகுதியை திரு.பி.சுவாமிநாதனும் வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *