மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி, திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இனத் தம்பதி. 100 நாள்களைக் கடந்த நிலையில், குழந்தை கிடைக்காமல் அல்லாடிவந்தனர்

இதைப் பற்றிய செய்திகளை அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி பாேல ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், சிறுமி ஹரிணி மீட்கப்பட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் பார்த்தாகக் கூறிய நிலையில், திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *