சென்னை: நாடு முழுவதும், அனைத்து வங்கிகளும், வழக்கம் போல இன்று செயல்படும். தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி செவ்வாயன்று வருவதால், அரசு ஊழியர்கள் நலன் கருதி, தீபாவளிக்கு முதல் நாளான இன்று, தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படுமா… என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு தான் விடுமுறை அறிவித்து உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு, விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், அனைத்து வங்கிகளும், இன்று வழக்கம் போல செயல்படும்.தீபாவளியான நாளை, வங்கிகளுக்கு விடுமுறை; அடுத்த நாள் வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *