சென்னையில் இயங்கி வரும் சிறு,குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அவ்வப்போது பலவிதமான பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளித்து வரும் நிலையில் இன்று முதல் உயிரித் தொழில்நுட்பப் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழில்முனைவோர் பயிற்சியை தொடங்கவுள்ளது. இந்த தகவலை சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: மத்திய சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் உயிரித் தொழில்நுட்பப் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழில்முனைவோர் பயிற்சி ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 7 வரை நடக்க உள்ளது.

இந்த பயிற்சியில் இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகள், சிறு, குறு, பன்னாட்டு, தனியார் உள்ளிட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்தப் பயிற்சியின் போது, உயிரி வேதி உரம், தொழில்சாலை நொதிகள், நுண்ணுயிர் பூச்சிக் கொல்லி மருந்துகள், இயற்கை உயிர் உரங்கள், கடல் சார்ந்த திரவ உரங்கள், திட கழிவு உரங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரித் தொழில் நுட்பப் பொருள்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 89393-56245, 99413-39788 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆலது கிண்டி, ஜிஎஸ்டி சாலையிலுள்ள சிறு, குறு தொழில் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளாலம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Bio products training starts today in Chennai from August 3rd to 7th.