தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடரும்போது மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியை தொடராமல் இருக்கும் மாணவ மாணவிகளின் விவரங்களை பெற்று அவர்களுக்கு உயர் கல்வியை தொடர அரசு உதவி செய்து வரும் நிலையில் வறுமையை காரணம் காட்டி படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிப்படிப்பு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பது அரசின் முழு கொள்கையாக இருந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *