electric trainசென்னையில் அவ்வப்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் நாளையும் சென்னை மூர்மார்க்கெட் – அரக்கோணம் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வில்லிவாக்கம் – அம்பத்தூர் இடையே ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இன்று அதாவது சனிக்கிழமை ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்த விவரங்கள்

1. சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 10, 10.10, 10.30, 10.45, 11.10. 11.45 மணிக்கு ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம், அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள்.
2. கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இரவு 9.45 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில்.
3. பட்டாபிராமில் இருந்து இரவு 9.45, இரவு 11.35 மணி, திருவள்ளூரில் இருந்து 9.55 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து இரவு 9.25, 9.45 மணிக்கும் மூர்மார்க்கெட் வளாகத்துக்கு புறப்படும் ரயில்கள்.
4. மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11, 11.25 மணிக்கு ஆவடி புறப்படும் மின்சார ரயில்கள்.
5. வியாசர்பாடி ஜீவா, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், இந்துக் கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.
6. பட்டாபிராம், அரக்கோணத்தில் இருந்து இரவு 10.40, 9.50 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகத்துக்குப் புறப்படும் மின்சார ரயில்கள் இந்துக் கல்லூரி, அன்னனூர், 7. திருமுல்லைவாயில், அம்பத்தூர், பட்டரவாக்கம், கொரட்டூர், பெரம்பூர் லோகோ, பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸ், வியாசார்பாடி ஜீவா ரயில் நிலையங்களில் நிற்காது.

நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த விவரங்கள்:

1. மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு பட்டாபிராம், இரவு 10, 10.10 ஆவடி, இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், இரவு 10.30 மணி பட்டாபிராம் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
2. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
3. பட்டாபிராம் டிப்போவில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கும், இரவு 9.25 மணிக்கும் மூர்மார்க்கெட் வளாகம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
4. ஆவடியில் இருந்து அதிகாலை 4, 4.10 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகத்துக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
5. திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு மூர்மார்க்கெட் வளாகம் புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மூர்மார்க்கெட் வளாக்ததில் இருந்து ஆவடிக்கு நள்ளிரவு 12.15, சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூருக்கு காலை 3.40, மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 4 மணிக்கு திருத்தணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் வியாசர்பாடி ஜீவா, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், ஹிந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Cause of Maintanence Work: Chennai Electrical train service Changed.