10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜன, 16 முதல் பிப்,15 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ மத்திய இடைநிலை கல்வி வாரியமான ஜனவரி 16 முதல் வரும் பிப்ரவரி மாத இறுதியில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றது.

இதற்கு முன்னதாக செய்முறைத்தேர்வுகளை முடித்து அதற்கான மதிப்பெண் விவரங்களை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தர விட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15 வரை எந்த நாட்கள் வசதியாக உள்ளதோ அதன் படி தேர்வுகளை நடத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *