மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseresults.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து வருகின்றனர்.

மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22 வரை தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 10,67,900 மாணவர்களும் தமிழகத்தில் 13,817 மாணவர்களும் இந்த தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணியளவில் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அகில இந்திய அளவில் டில்லி மாண்ட்போர்டு பள்ளியை சேர்ந்த மாணவி சுக்ரிதி குப்தா 497 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அரியானாவை சேர்ந்த பாலக்கோயல் 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சென்னை கே.கே.,நகர் பி.எஸ்.பி.பி. பள்ளி மாணவர் அஜீஸ் சேகர் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார். மேலும் கோவையில் உள்ள 2 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : CBSE +2 exam result released.