மத்திய கல்வி வாரியம் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி 26–ந் தேதி வரையும் 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 2முதல் மார்ச் 20ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 450 பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவ– மாணவிகள் எழுதுகின்றனர். 12–ம் வகுப்பு தேர்வை 16 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10–ம் வகுப்பு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 3.3 சதவீதமும், பிளஸ் – 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சி.பி.எஸ்.இ தேர்வை நாடு முழுவதும் 10–ம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 பேரும், பிளஸ்– 2 தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரத்து 368 பேரும் எழுதுகின்றனர்.

English Summary: CBSE class 10 and class 12 exams started today.