சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல இன்று மற்றும் 23-ந்தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ந்தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 102 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டடம் ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., பொன்னேரியில் 4 செ.மீ., ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், கத்திவாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கக்கடலில் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக, வங்கக்கடலின் வடகிழக்கு கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் 22-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *