தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *