ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு அக்.15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில்(16127) எர்ணாகுளம்-குருவாயூர் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று (அக்.13) முதல் அக்.29-ம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று (அக்.13) முதல் அக்.30-ம் தேதி வரை புறப்படவேண்டிய விரைவு ரயில்(22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *