சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில், சூலூர்பேட்டை-தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (17.10.2023) மாற்றம் செய்யப்பட உள்ளது.

  • மூர்மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு இன்று (17.10.2023) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு இன்று இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
  • சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று நண்பகல் 12.35, மாலை 6.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், ஆவடி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்படவுள்ளன.
  • மூர் மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு இன்று காலை 7.30, 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
  • சென்னை கடற்கரை-சூலூர்பேட்டைக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
  • சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று மதியம் 1.20, பிற்பகல் 3.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் சூலூர்பேட்டை-எளாவூர் இடையேபகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
  • சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்று காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *