சென்னை: ஆவின் பாலகங்களில் இன்று முதல் தள்ளுபடி விலையில் ‘பனீர்’ விற்கப்பட உள்ளது. பொதுமக்களின் உணவு பழக்க வழக்கம் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பனீர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். பொதுமக்கள் தேவைக்கேற்ப தரமான பனீரை ஆவின் நிறுவனம், நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி விலையில் பனீர் விற்பனை இன்று துவங்குகிறது. இதன்படி 200 கிராம் பனீர் 10 ரூபாய் தள்ளுபடியுடன் 70 ரூபாய்; அரை கிலோ பனீர் 25 ரூபாய் தள்ளுபடியுடன் 175 ரூபாய்; ஒரு கிலோ பனீர் 50 ரூபாய் தள்ளுபடியுடன் 350 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் சில்லரை விற்பனை நிலையங்கள் மொத்த விற்பனையாளர்கள் வழியே இன்று முதல் ஏப்., 5 வரை சிறப்பு தள்ளுபடி விலையில் பனீர் விற்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *