schools-leave-261115
சென்னையில் கடந்த 20 நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. கனமழை காரணமாக கடந்த 12ஆம் தேதி முதல் நேற்று வரை சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதாவது தீபாவளிக்கு பிறகு இன்னும் ஒருநாள் கூட பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளை தவிர பிற பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகளுக்கும் மட்டும் 26-ந் தேதி (இன்று) விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏனைய அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இன்று முதல் செயல்படும்.

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 24 பள்ளிகளின் விவரம் பின்வருமாறு:

1. வேளச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

2. ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி

3. வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி

4. வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி

5. சைதாப்பேட்டை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி

6. ஆர்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி

7. ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி

8. எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி

9. வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி

10. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி

11. ஓட்டேரி கோட்டி எம். அப்புசெட்டி உயர்நிலைப்பள்ளி

12. வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி

13. சாலிகிராமத்தில் உள்ள அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி

14. சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி

15. ராஜா அண்ணாமலைபுரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி

16* ஆயிரம் விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி

17. ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி

18. அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி

19. கோயம்பேடு சென்னை தொடக்கப்பள்ளி

20. சைதாப்பேட்டை பஜார் ரோடு சென்னை தொடக்கப்பள்ளி

21. சைதாப்பேட்டை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி

22. வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி

23. எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி

24. மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

1. இடையாத்தூர் தொடக்கப்பள்ளி

2. இரும்புலிசேரி தொடக்கப்பள்ளி

3. மாங்காசு அரசு நடுநிலைப்பள்ளி

4. செம்மஞ்சேரி நடுநிலைப்பள்ளி

5. கீழ் ஒட்டிவாக்கம் நடுநிலைப்பள்ளி

6. மவுலிவாக்கம் உயர்நிலைப்பள்ளி

7. கோவளம் உயர்நிலைப்பள்ளி

8. செம்மஞ்சேரி மேல்நிலைப்பள்ளி

9. திருமுடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி

மேற்கண்ட பள்ளிகள் தவிர மீது அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Chennai 24 schools holiday today due to water logging