book-fairசென்னை தீவுத் திடல் மைதானத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 39-ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்றுடன் அதாவது ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 12 நாள்களாக நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பதிப்பக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

கண்காட்சி நிறைவடைவதை முன்னிட்டு பல பதிப்பகத்தார் 20 சதவீதத்துக்கும் அதிகமான தள்ளுபடி விலையில் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். கடும் வெயில் மற்றும் எதிர்பாராத மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக புத்தகக் கண்காட்சி களையிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன் தினம் என இரண்டு நாள்களாக வாசகர் கூட்டம் அதிகரித்து இருந்ததால் பதிப்பகத்தார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இறுதி நாளான இன்றும் வாசகர்கள் அதிக அளவில் வரக்கூடும் என புத்தக விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மு.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

English Summary: Chennai Book Fair is Closing Today.