சென்னை டி.எம்.எஸ்: வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அண்ணாசாலை வழித்தடத்தில் டி.எம்.எஸ். – வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., சென்ட்ரல், உயர்நீதிமன்றம், மண்ணடி வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில், 6 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் பயணிக்கிறது.

பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றதை அடுத்து, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மெட்ரோ ரெயில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர் குழுவினர் தலைமையில் நடந்ததை அடுத்து, டிசம்பர் மாதம் பயணிகள் சேவைக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *