சென்னை பகுதியில் உள்ள அஞ்சல் சேமிப்பு வங்கிகளின் வேலை நேரம் ஒரு மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீட்டிப்பு வரும் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31ஆம் தேதி நெருங்கி வருவதால், அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்த வேலை நேரம் நீட்டிப்பு முடிவை அஞ்சல் துறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெண் குழந்தைகளுக்கான “சுகன்யா சம்ரித்தி’ கணக்குகளை நடப்பு நிதியாண்டிற்குள் 1 கோடி என்ற இலக்கை அடைய தபால் துறை திட்டமிட்டிருப்பதாகவும், இந்த ஒரு மணி நேர நீட்டிப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.