சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ஆக.31 முதல் செப்.2 வரை காலை 6.25 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16057), ரேணிகுண்டா – திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படும்.

திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆக.31முதல் செப்.2 வரை காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16054) திருப்பதி – ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. ரேணிகுண்டாவில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும்.

காட்பாடி – திருப்பதி இடையேஆக.30 முதல் செப்.3 வரை இயக்கப்படும் 3 சிறப்பு பாசஞ்சர் ரயில்களும், ஒரு மெமு ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர, ஜோலார்பேட்டை – காட்பாடி இடையே ஆக.30. முதல்செப்.3 வரை இயக்கப்படும் ஒருமெமு விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் – பித்ரகுண்டா இடையே ஆக.30 முதல் செப்.1 வரை இயக்கப்படும் விரைவு ரயில் (17238),பித்ர குண்டா – சென்னை சென்ட்ரல் இடையேயான அதிகாலை4.45 மணி ரயில் (17237) ரத்து செய்யப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *