திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்தி:

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை – சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி,

  • ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4 மற்றும் 5 மணிக்கும்,
  • ஆகஸ்ட் 2-ஆம் தேதி மறுமாா்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4 மற்றும் 5 மணிக்கும் இந்த சிறப்பு பேருந்துகள் புறப்படும்.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய கைப்பேசி: 9445014452 , தலைமையக கைப்பேசி: 9445014463, 9445014424 மற்றும் 9445014416 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *