சென்னை வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணிகளை நடப்பு நிதியாண்டில் (2023-24) முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே சார்பில், நாட்டின் 77-வது சுதந்திர தின விழா பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், தேசிய கொடியேற்றி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது:

இந்திய ரயில்வேயில் வெவ்வேறு சாதனைகளில் தெற்கு ரயில்வே முக்கிய பங்களிப்பு அளிக்கிறது. 2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.11,000 கோடியாக இருந்தது. இது, 2021-22-ம் நிதியாண்டை விட 51 சதவீதம் அதிகமாகும்.

நடப்பாண்டில் முதல் 4 மாதங்களில் நீடித்த வளர்ச்சியைத் தக்கவைத்து, மொத்த வருவாய் ரூ.3,883கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 11 சதவீதம் அதிகம். ரயில்வே சரக்கு போக்குவரத்து பிரிவில், சரக்கு ஏற்றுதல் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை 80 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *