மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு 314 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 157 ரூபாய் முதல் 2250 ரூபாய் வரையிலும் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் எனக் கூறியுள்ள முதலமைச்சர், இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரத்து 157 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *