சென்னை: மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கான, பண்டிகை முன் பணத்தை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எழுதியுள்ள கடிதம்: பண்டிகை முன்பணமாக, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய்; நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; தொடக்க வேளாண்மை கடன் சங்க ஊழியர்களுக்கு, 8,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, மத்திய, நகர வங்கி பணியாளர்களுக்கு, பண்டிகை முன் பணத்தை, 20 ஆயிரம் ரூபாயாகவும், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் போன்ற, தொடக்க நிலை சங்கங்களுக்கு, 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *