பள்ளி காலாண்டுத் தேர்வு முடிவடைந்ததை அடுத்து, மாணவர்களுக்கு இன்று (28.09.2023) முதல் அக். 2-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை இன்று(28.09.2023) முதல் தொடங்கியுள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் 2ம்பருவத்துக்கான பள்ளிகள் அக். 3ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே தொடக்கப் பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 2ம் பருவத்துக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது. அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அவர்களுக்கு வகுப்புகள் அக். 9ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *