செப்டம்பர் முதல் வாரத்தில் இரண்டாம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலும் பிறகு 8 9ம் தேதி வங்கிகள் செயல்படாது என்று ‘whatsapp’ செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் அப்படி இல்லை என்று வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூணாம் தேதி திங்கட்கிழமை ஜன்மாஷ்டமி விடுமுறை. அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்றும் ‘whatsapp’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Janmastami-க்கு சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை.

எனவே அன்றைய தினம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏடிஎம் சேவைகள் தடை இன்றி செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 4, 5 தேதிகளில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்கிறார்கள்.

இதனால் மற்ற வங்கிகளில் அன்றாட பணிகளில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல எட்டாம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை. எனவே முதல் வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்பது தவறான தகவல் என்று வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *