தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வெளியே வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்று சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி மக்கள் அனைவரும் சரியாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *