திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 20) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நவம்பர் 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *