அனைத்து ரேஷன் ஊழியர்களுக்கும், தீபாவளி முன்பணமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடித விபரம்:தொழிற்சங்கங்கள் சார்பில், அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பண்டிகை முன்பணமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.கூட்டுறவு சங்க பதிவாளர், அக்., 15ல் அனுப்பிய கடிதத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற, தொடக்க நிலை சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பண்டிகை முன்பணம், 15 ஆயிரம் ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்க, அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் வாயிலாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்கள், பண்டிகை முன்பணமாக, 15 ஆயிரம் ரூபாய் பெற இயலும். இந்நிலையில், அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கும், சங்க பாகுபாடின்றி, ஒரே தொகையாக, 15 ஆயிரம் ரூபாய், பண்டிகை முன்பணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பண்டிகை முன்பணம், 15 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க, ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *