சென்னை: டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், அன்பழகன், விஜயபாஸ்கர் மற்றும் பல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது குறித்தும், அவற்றை தடுக்க எடுக்கப்பட வேண்டிய, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தை தொடர்ந்து, முதல்வர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டமும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *