எந்திரமயமான உலகில் பெருகி வரும் தொழிசாலைகளால் மக்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் தற்போது அதிமான மக்களை தாக்கக்கூடிய நோய் என்னவென்றால் அது தோல் நோய்கள் தான்.

இந்த தோல் நோய்களை போக்குவதற்காக பல மருத்துவர்களை மேற்கொண்டாலும், நிரந்தரமான தீர்வு கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்த நோயை நீக்குவதற்கு குப்பைமேனி ஒரு சிறந்த மருத்துவ பொருளாகும். குப்பை மேனி கீரை கசப்பு, காரத் சுவைகளும், வெப்பத்த தன்மையும் கொண்டது. குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

உடல் எடை: குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். கொழுப்பை குறைப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. பூத்த குப்பைமேனியை வேருடன் பிடிங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில் 2-5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை என 48 நாட்கள் சாப்பிட்டால் எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.

தோல் நோய்: தோல் நோய் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில பூசி வர வேண்டும். அல்லது குப்பைமேனியிலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம்.

நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையை பின்பற்றி வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *