சென்னை: 5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த 2 நாள் இரவு உறைபனி நீடிக்கும்.

நீலகிரி, கோவை திண்டுக்கல் மாவட்ட மலைசார்ந்த பகுதி கடந்த 5ம் தேதி அதிகமாக இருந்த உறை பனி குறையும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *