சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நவ., 15ல் இருந்து 25 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள் அபராதமின்றி செலுத்த இம்மாதம் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்தோர் இம்மாதம் 31ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணத்தை செலுத்தலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் பகுதி நுகர்வோர்களும், நாகையில், 14 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நுகர்வோர்களும், வரும், 26 வரை, அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம்.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 26ம் தேதி வரை அபராதமின்றி கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *