சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கால அட்டவணைப்படி ஓடுவதில்லை. பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மின்சார ரயில்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. இதுவே ரயில் தண்டவாளத்தில் கோளாறு, ரயிகளில் பழுது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், மணிக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் ரயில் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “புறநகர் பகுதிக்கு இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்களை காலஅட்டவணைப்படி இயக்குவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களை தாமதமாக இயக்கும்போது, பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

தற்போது, செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார பாஸ்ட் ரயில்களும் ரத்து செய்யப்பட்டு மெதுவான தடத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமாக இயக்கப்பட்ட தாம்பரம் ரயில்களும் தாமதமாக வருகின்றன. எனவே, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மின்சார பாஸ்ட் ரயில்களை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *