சென்னை: ‘உதவி பொறியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் ‘ஹால் டிக்கெட்’ டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய வரும் 30ல் எழுத்து தேர்வு நடத்த உள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களின் ‘இ – மெயிலுக்கு’ ஹால் டிக்கெட் அனுப்பப் பட்டு உள்ளதாகவும் கிடைக்காதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இரு முறையிலும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் வரும் 17ம் தேதிக்குள் மின் வாரியத்திற்கு இ-மெயில் வாயிலாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *