மதுரை: மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) அலுவலகத்தில் ஏப்.,10ல் ‘நிதி உங்கள் அருகில்’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கருத்துக்களை எழுதி மக்கள் தொடர்பு அதிகாரியிடம் மார்ச் 25க்குள் நேரடியாக சமர்பிக்கலாம்.

அல்லது தபால் மூலம் ‘நிதி உங்கள் அருகில்’ என எழுதி மண்டல அலுவலகம், லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை – 2 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என உதவி கமிஷனர் சுதா வனமாலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *