புதுடில்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று(அக்.,6) பிற்பகல் அறிவிக்கப்பட உள்ளன.

தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தலைமையில் 2 நாள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று துவங்கியது. இதில் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ராவத் ஆலோசனை நடத்தினார். இதில் ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்க உள்ளது.

நவம்பர் 15 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் எனவும், அக்டோபர் 12 ம் தேதி முதல் தேர்தல் நடத்தை முறைகள் கடைபிடிக்கப்பட்டு, நவம்பர் 12 ம்தேதி தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *